கருணாநிதி நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை!

கருணாநிதி நினைவிடத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஆக. 18) மரியாதை செலுத்தினார்.
கருணாநிதி நினைவிடம்
கருணாநிதி நினைவிடம்
Published on
Updated on
1 min read

சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஆக. 18) மரியாதை செலுத்தினார்.

அவருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கருணாநிதி நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளியிடுகிறார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com