கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரௌடியை சுட்டுப் பிடித்த காவல் ஆய்வாளர்!

தேடப்பட்டு வந்த ரௌடி செல்வத்தை கன்னியாகுமரியில் இன்ஸ்பெக்டர் ஆதாம் அலியின் தலைமையிலான குழு சுட்டுப் பிடித்தனர்

News image

கோப்புப் படம்

Updated On :19 ஆகஸ்ட் 2024, 11:00 am

கன்னியாகுமரியில் தேடப்பட்டு வந்த ரௌடி செல்வத்தை இன்ஸ்பெக்டர் ஆதாம் அலியின் தலைமையிலான குழு சுட்டுப் பிடித்தனர்.

தூத்துக்குடி செல்வம் என்ற தேடப்பட்டு வந்த ரௌடி, கன்னியாகுமரியின் அஞ்சுகிராமம் பகுதியில் ஆக. 18, ஞாயிற்றுக்கிழமை, ஒருவரைத் தாக்கிவிட்டு, அவரிடமிருந்து ரூ. 3000 ஐ கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து, ரௌடி செல்வத்தின் மீது சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர்மீது மாநிலம் முழுவதும் 28 வழக்குகள் உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தேரூருக்கு அருகில் ரௌடி செல்வம் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் ஆதாம் அலி தலைமையிலான குழு, இன்று (ஆக. 19) ரௌடியைப் பிடிக்கச் சென்றனர்.

இந்த தேடுதல் வேட்டையின்போது, உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜின் கையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பயோட முயன்றுள்ளார், ரௌடி செல்வம். இதனைத் தொடர்ந்து, செல்வத்தின் முழங்காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார்,

காவல் ஆய்வாளர் ஆதாம் அலி. மேலும், உதவி ஆய்வாளரும் ரௌடியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரௌடி செல்வத்திடம் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.