மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரௌடியை சுட்டுப் பிடித்த காவல் ஆய்வாளர்!

தேடப்பட்டு வந்த ரௌடி செல்வத்தை கன்னியாகுமரியில் இன்ஸ்பெக்டர் ஆதாம் அலியின் தலைமையிலான குழு சுட்டுப் பிடித்தனர்

News image
கோப்புப் படம்
Updated On :19 ஆகஸ்ட் 2024, 11:00 am

இணையதளச் செய்திப் பிரிவு

கன்னியாகுமரியில் தேடப்பட்டு வந்த ரௌடி செல்வத்தை இன்ஸ்பெக்டர் ஆதாம் அலியின் தலைமையிலான குழு சுட்டுப் பிடித்தனர்.

தூத்துக்குடி செல்வம் என்ற தேடப்பட்டு வந்த ரௌடி, கன்னியாகுமரியின் அஞ்சுகிராமம் பகுதியில் ஆக. 18, ஞாயிற்றுக்கிழமை, ஒருவரைத் தாக்கிவிட்டு, அவரிடமிருந்து ரூ. 3000 ஐ கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து, ரௌடி செல்வத்தின் மீது சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர்மீது மாநிலம் முழுவதும் 28 வழக்குகள் உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தேரூருக்கு அருகில் ரௌடி செல்வம் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் ஆதாம் அலி தலைமையிலான குழு, இன்று (ஆக. 19) ரௌடியைப் பிடிக்கச் சென்றனர்.

இந்த தேடுதல் வேட்டையின்போது, உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜின் கையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பயோட முயன்றுள்ளார், ரௌடி செல்வம். இதனைத் தொடர்ந்து, செல்வத்தின் முழங்காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார்,

காவல் ஆய்வாளர் ஆதாம் அலி. மேலும், உதவி ஆய்வாளரும் ரௌடியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரௌடி செல்வத்திடம் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.