முதல்வரின் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்!
முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிப் பிரிவுச் செயலாளர்கள் மாற்றம் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தலைமைச்செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து நா.முருகானந்தம் ஐஏஎஸ் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக நேற்று(ஆக. 19) நியமனம் செய்யப்பட்டார். இவர் முதல்வரின் முதல் தனிச் செயலாளராக இருந்தார்.
தொடர்ந்து, முதல்வரின் தனிச் செயலாளர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, முதல்வரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். அந்த சமயத்தில் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தியவர் .
இரண்டாவது செயலாளராக எம்.எஸ். சண்முகம் ஐஏஎஸ், மூன்றாவது செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உமா நாத், எம்.எஸ். சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய மூவரும் முறையே முதல்வரின் 2, 3, 4 ஆவது தனிச் செயலாளர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.