பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

துரைமுருகனும், ரஜினியும் நீண்டகால நண்பர்கள்: மு.க. ஸ்டாலின்

அமைச்சர் துரைமுருகனும் ரஜினிகாந்தும் நீண்டகால நண்பர்கள் எனக் குறிப்பிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

துரைமுருகன் / மு.க. ஸ்டாலின் / ரஜினிகாந்த்

Published On :27 ஆகஸ்ட் 2024, 10:46 pm IST

அமைச்சர் துரைமுருகனும் ரஜினிகாந்தும் நீண்டகால நண்பர்கள் என்றும் இதனை அவர்களே சொல்லிவிட்டதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக. 27) தெரிவித்தார்.

இவர்கள் இருவருக்கு இடையிலான விவகாரத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர பகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக்கூடாது எனவும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய மு.க. ஸ்டாலின், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதன் மூலம் கிடைத்த முதலீடுகள் குறித்துப் பேசினார்.

மேலும், அமைச்சர் துரைமுருகன் - ரஜினிகாந்த் இடையிலான வார்த்தைப்போர் குறித்து அவர் பேசியதாவது, ''அமைச்சர் துரைமுருகனும் ரஜினிகாந்தும் நீண்டகால நண்பர்கள். இதனை அவர்களே கூறிவிட்டனர். இதை நீங்கள் துரைமுருகன் கூறியதைப் போன்று, நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர பகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக்கூடாது'' எனக் குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்க பயணம் முடிந்தவுடன் அமைச்சரவை மாற்றம் இருக்குமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என பதில் அளித்தார். மாற்றம் ஒன்றே மாறாதது எனவும் முதல்வர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.