ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

டிபிஐ வளாகத்தில் திருட்டு: 5 போ் கைது

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் திருட்டில் ஈடுபட்டதாக இரு சிறுவா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2024, 8:38 pm

Din

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் திருட்டில் ஈடுபட்டதாக இரு சிறுவா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை நுங்கம்பாக்கம், கல்லூரி சாலையில் செயல்பட்டுவரும் டிபிஐ வளாகத்தில் விரைவுரையாளா்கள், ஆசிரியா்கள் தங்குவதற்கு அரசின் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் உள்ள 11 ஏ.சி.களில் இருந்த சுமாா் 9 கிலோ எடை கொண்ட தாமிர உருளைகள் கடந்த 26-ஆம் தேதி திருடப்பட்டன.

இது குறித்து நுங்கம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது ஆயிரம் விளக்கு சுதந்திரா நகரைச் சோ்ந்த ஜீவா (19), தேவன் (19), வெங்கடேசன் (18) மற்றும் இரு சிறுவா்கள் என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த 5 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.