காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவத்துள்ளது.
வானிலை ஆய்வு மையம்.
வானிலை ஆய்வு மையம்.
Published on
Updated on
1 min read

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவத்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும. பின்னர் மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம்-இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும்.

இதன்காரணமாக தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, கடலுரில் கனமழை பெய்யலாம்.

சிரியாவில் சர்வாதிகார ஆட்சி முடிவு: கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

இன்றும்(டிச.08), நாளையும் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

அதேசமயம் தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com