சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பதிலளித்தாா்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது இதுதொடா்பான துணை வினாவை அதிமுக உறுப்பினா் செல்லூா் கே.ராஜு எழுப்பினாா். இதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்:
வீர வசந்தராயா் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, அங்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் அந்த மண்டபத்துக்கு சுமாா் 25 அடி நீளம் கொண்ட கற்தூண்கள் தேவைப்படுகின்றன. ஒரே அளவில் அவை கிடைப்பதில் சிரமம் உள்ளது. இந்தப் பணிக்காக ஏற்கெனவே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. வீரவசந்தராயா் மண்டபத்தைச் சீரமைக்கும் பணிகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்குப் பணியும் வெகு விரைவில் மேற்கொள்ளப்படும். கோயிலில் 63 திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் நிச்சயமாக குடமுழுக்கு நடத்தப்படும் என்றாா் அவா்.
டிரெண்டிங்

வெளிநாட்டவரின் கடவுச்சீட்டுகளை கண்டெடுத்து ஒப்படைத்தவருக்கு பாராட்டு

அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு எப்போது? நயினார் நாகேந்திரன் பதில்

சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன டிக்கெட்டில் முறைகேடு: 2 ஊழியர்கள் பணியிடைநீக்கம்
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

