மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விஜயகாந்த் போல எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர் ஈவிகேஸ் இளங்கோவன்: பிரேமலதா

விஜயகாந்த் போல எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர் ஈவிகேஸ் இளங்கோவன் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

News image
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் பிரேமலதா விஜயகாந்த்.
Updated On :14 டிசம்பர் 2024, 1:11 pm

DIN

விஜயகாந்த் போல எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர் ஈவிகேஸ் இளங்கோவன் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், தமிழகம் முழுவதும் மழை வெள்ள பாதிப்புகள் அதிகமாக உள்ளன. தொலைநோக்கு பார்வையோடு அரசு அனுகி இருக்க வேண்டும். திட்டமிடல் சரியாக இல்லாததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் சொந்த ஊரிலேயே மக்கள் அகதியாக உள்ளனர்.

முன்னறிவிப்பு இல்லாமல் சாத்தனூர் அணையை திறந்ததால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் தமிழகத்திற்கு தேவையான உரிய நிவாரண தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழக அரசு, மக்களிடம் வாங்கிய வரிப் பணங்கள் எங்கே போனது. எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சமாளிப்போம் என்று வாய்சவடால் விடுவதை தவிர்த்து முதல்வர் செயல்பாட்டில் இறங்க வேண்டும்.

அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக செய்யவில்லை. அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேசன் அட்டைக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கும் போது தமிழகத்தில் ரூ.2000 கொடுப்பது போதாது, ரேஷன் அட்டைக்கு ரூ.10,000 வழங்க வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் கொடுக்க வேண்டும். இம்மாசோதாவை அனைவரும் ஏற்றுக் கொண்டால்தான் தேமுதிக வரவேற்கும்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் மறைவு வருந்தத்தக்கது. விஜயகாந்த் போல அவர் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். நல்ல குடும்ப நண்பர். அவர் இறப்பு கேள்விப்பட்டு வருத்தமடைந்ததாகவும் ஈவிகேஎஸ் உடலுக்கு நாளை நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.