நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

குகேஷுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image

ரஜினிகாந்த் / குகேஷ் - கோப்புப் படம்

Updated On :15 டிசம்பர் 2024, 4:48 pm IST

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குகேஷை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து உரையாடினார். அப்போது ரஜினிகாந்துக்கு குகேஷ் நன்றி கூறினார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீனாவின் 32 வயதான டிங் லிரெனை வீழ்த்தி 18 வயதான குகேஷ் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் குகேஷ் படைத்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 13) நடந்த பரிசளிப்பு விழாவில் சர்வதேச செஸ் சம்மேளனம் சார்பில் குகேஷுக்கு பரிசுக் கோப்பையுடன் ரூ.11.5 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த குகேஷுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட முக்கிய பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் குகேஷை இன்று (டிச. 15) தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவரின் பெற்றோர் குறித்தும் கேட்டறிந்தார். ரஜினிகாந்த் உடன் பேசிய குகேஷ், அவருக்கு நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.