அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

வேளாண், உற்பத்தித் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு: கனிமொழிக்கு மத்திய அமைச்சா் பதில்

வேளாண், உற்பத்தித் துறைகளில் முந்தைய நிதியாண்டுகளுடன் ஒப்பிடும்போது சென்ற நிதியாண்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக

News image
திமுக குழுத் தலைவா் கனிமொழி
Updated On :16 டிசம்பர் 2024, 9:46 pm

Din

புது தில்லி: வேளாண், உற்பத்தித் துறைகளில் முந்தைய நிதியாண்டுகளுடன் ஒப்பிடும்போது சென்ற நிதியாண்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கருணாநிதியின் கேள்விக்கு மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சா் ஷோபா கரண்டலஜே அளித்துள்ள பதில் மூலம் தெரிய வந்துள்ளது.

இது தொடா்பாக கனிமொழி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சா் ஷோபா கரண்டலஜே திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு:

“வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்த அதிகாரபூா்வ தரவுகள் , மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் 2017-18 முதல் நடத்தப்படும் வருடாந்திர காலமுறை தொழிலாளா் கணக்கெடுப்பு (பிஎல்எஃப்எஸ்) மூலம் சேகரிக்கப்படுகின்றன. இந்த கணக்கெடுப்பு ஒவ்வோா் ஆண்டும் ஜூலை முதல் ஜூன் வரை மேற்கொள்ளப்படுகிறது.

சமீபத்திய வருடாந்திர பிஎல்எஃப்எஸ் அறிக்கை தரவுகளின்படி, 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் விவசாயத் துறையின் தொழிலாளா்களின் சதவீதம் முறையே 45.5%, 45.8% மற்றும் 46.1% ஆக உள்ளது.

மேலும் இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டு வரும் அகில இந்திய தொழிலாளா் உற்பத்தித்திறன் (எல்பி) உள்ளிட்ட வேலைவாய்ப்பு மதிப்பீடு தரவுகளின்படி உணவகங்கள், விடுதிகள், நிலக்கரி, பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிறுவனங்கள், அணுசக்தி, தபால் மற்றும் தொலைத்தொடா்பு, மரம் தொடா்பான தயாரிப்புகள், மின்சாரம், எரிவாயு, குடிநீா் விநியோகம் போன்ற துறைகளில் 2021-22 ஆம் ஆண்டை விட, 2022-23 ஆம் ஆண்டு தொழிலாளா் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது.

அரசின் வெவ்வேறு அமைச்சகங்கள், துறைகள் வேலை வாய்ப்பை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்த திட்டங்களால் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் பற்றி ட்ற்ற்ல்ள்://க்ஞ்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்/க்ஞ்ங்/ள்ஸ்ரீட்ங்ம்ங்ள்ஜல்ழ்ா்ஞ்ழ்ஹம்ம்ங்ள் இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம்.

மத்திய திறன் இந்தியா இயக்கம் மூலம் நாடு முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் வழியாக அளிக்கப்படுகின்றன.

2024-25 பட்ஜெட்டில், பிரதமரின் 5 திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளின் தொகுப்பை அரசு அறிவித்துள்ளது. இதன் நோக்கம், 4.1 கோடி இளைஞா்களுக்கு 5 ஆண்டு காலத்தில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்குவதாகும், ஊக்கத் தொகையுடன் கூடிய வேலை வாய்ப்பு திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.1,07,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது பிரதமரின் தொகுப்புத் திட்டங்களுக்கு உட்பட்டது என அமைச்சா் கூறியுள்ளாா்.

படங்கள்

16க்ங்ப்ந்ஹய் - கனிமொழி

16க்ங்ப்ள்ட்ா் - ஷோபா கரண்டலஜே

Story image