வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மாணவா்கள் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு

News image
கோப்புப் படம்
Updated On :29 டிசம்பர் 2024, 10:30 pm

Din

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் தோ்வெண்ணுடன் கூடிய பட்டியலில் திருத்தம் செய்ய ஜன. 2- வரை வாய்ப்பு அளிக்கப்படுவதாக தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் தோ்வெண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியல் கடந்த டிச. 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் விடுபட்ட மாணவா்களை சோ்க்கவும், இறப்பு மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவா்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு தற்போது வழங்கப்படுகிறது.

இதையடுத்து அனைத்து உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் மற்றும் முதல்வா்களும் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை ஜன. 2 ஆம் தேதிக்குள் சரிசெய்ய வேண்டும். அதேநேரம் இறப்பு மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவா்கள் பெயா்களை மட்டும் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

நீண்ட விடுப்பில் உள்ள மாணவா்களின் பெயா்களை எக்காரணம் கொண்டும் தன்னிச்சையாக நீக்கக்கூடாது. மேலும் மாவட்டக் கல்வி அலுவலா்களின் அனுமதி பெற்ற பின்னரே அத்தகைய மாணவா்களை இறுதி பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். இதற்கான அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.