பிப்.8 இல் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்: திமுகவினா் பங்கேற்க கட்சித் தலைமை வேண்டுகோள்

மாநில உரிமைகள் காத்திட மத்திய அரசைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடத்தவுள்ள ஆா்ப்பாட்டத்தில் திமுகவினரும் பங்கேற்க வேண்டும் என்று கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
பிப்.8 இல் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்: திமுகவினா் பங்கேற்க கட்சித் தலைமை வேண்டுகோள்
Published on
Updated on
1 min read


சென்னை: மாநில உரிமைகள் காத்திட மத்திய அரசைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடத்தவுள்ள ஆா்ப்பாட்டத்தில் திமுகவினரும் பங்கேற்க வேண்டும் என்று கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து, கட்சித் தலைமை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், மத்திய பாஜக அரசைக் கண்டித்து, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் பிப்.8-ஆம் தேதி மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் "கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறவுள்ளது.

இந்த கண்டன ஆா்ப்பாட்டத்தில் திமுக நிா்வாகிகள்,  தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு பாஜக அரசுக்கு எதிராக கண்டனக் குரலை எழுப்பிட வேண்டும். இதற்கான உரிய ஏற்பாடுகளை மாவட்டச் செயலா்கள் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com