புதுக்கோட்டை- குளத்தூரில் விறுவிறு ஜல்லிக்கட்டு

குளத்தூரில் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாடிவாசலில் இருந்து சீறிப் பாயும் காளையும் வீரர்களும்...
வாடிவாசலில் இருந்து சீறிப் பாயும் காளையும் வீரர்களும்...
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குளத்தூர் செல்லரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பெரியகுளத்தில் ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

கொடியசைத்து போட்டி தொடங்கப்பட்டபோது..
கொடியசைத்து போட்டி தொடங்கப்பட்டபோது..

போட்டியினை திமுக வடக்கு மாவட்டச் செயலர் கே.கே. செல்லப்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, சிவகங்கை பகுதிகளைச் சேர்ந்த சுமார் 700 காளைகள் இப்போட்டியில் களமிறங்கியுள்ளன.

நின்று விளையாடும் காளை...
நின்று விளையாடும் காளை...

சுமார் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று மாடுகளைத் தழுவ முயற்சித்து வருகின்றனர்.

மாட்டைத் துரத்தும் வீரர்களும் மாட்டின் உரிமையாளர்களும்...
மாட்டைத் துரத்தும் வீரர்களும் மாட்டின் உரிமையாளர்களும்...

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியில் ஏராளமான பரிசுகள் வெற்றிப் பெற்ற மாடுகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com