மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புதுக்கோட்டை- குளத்தூரில் விறுவிறு ஜல்லிக்கட்டு

குளத்தூரில் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

News image

வாடிவாசலில் இருந்து சீறிப் பாயும் காளையும் வீரர்களும்...

Updated On :4 பிப்ரவரி 2024, 5:34 am

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குளத்தூர் செல்லரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பெரியகுளத்தில் ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

கொடியசைத்து போட்டி தொடங்கப்பட்டபோது..

கொடியசைத்து போட்டி தொடங்கப்பட்டபோது..

போட்டியினை திமுக வடக்கு மாவட்டச் செயலர் கே.கே. செல்லப்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, சிவகங்கை பகுதிகளைச் சேர்ந்த சுமார் 700 காளைகள் இப்போட்டியில் களமிறங்கியுள்ளன.

நின்று விளையாடும் காளை...

நின்று விளையாடும் காளை...

சுமார் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று மாடுகளைத் தழுவ முயற்சித்து வருகின்றனர்.

மாட்டைத் துரத்தும் வீரர்களும் மாட்டின் உரிமையாளர்களும்...

மாட்டைத் துரத்தும் வீரர்களும் மாட்டின் உரிமையாளர்களும்...

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியில் ஏராளமான பரிசுகள் வெற்றிப் பெற்ற மாடுகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.