திருவள்ளூரில் டிட்டோ ஜாக் அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (டிட்டோ- ஜாக்) ஞாயிற்றுக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் உயர்மட்ட குழுவினர் ராஜாஜி, பாலுமகேந்திரன், முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

டிட்டோ- ஜாக் பொதுக்குழு உறுப்பினர் சேகர், லோகைய்யா, கோகுலன், பாலசுபந்தரம், ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிட்டோ- ஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் பங்கேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கும் அரசாணை எண் 247-ஐ ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com