இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்

இலங்கை கடற்படையால்  கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள்  இன்று(பிப்.6) காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். 

சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட  தமிழக மீனவர்கள் இன்று(பிப்.6) சென்னை திரும்பினர்.

புதுக்கோட்டையை சேர்ந்த தமிழக மீனவர்கள் 12 பேர்  நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் அனைவரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.

அதனைத் தொடர்ந்து விமானம் மூலம் கொழும்புவிலிருந்து இன்று காலை  சென்னை வந்தடைந்த மீனவர்கள் அனைவரையும், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com