
சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று(பிப்.6) சென்னை திரும்பினர்.
புதுக்கோட்டையை சேர்ந்த தமிழக மீனவர்கள் 12 பேர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் அனைவரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.
அதனைத் தொடர்ந்து விமானம் மூலம் கொழும்புவிலிருந்து இன்று காலை சென்னை வந்தடைந்த மீனவர்கள் அனைவரையும், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.