மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் மர்ம நபர் ஒருவர் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் பகுதியில் பழமை வாய்ந்த கபாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம் தமிழ்நாடு அரசு அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் போதையில் இருந்த நபர் ஒருவர், கையில் பெட்ரோல் கேனுடன் கோயிலின் பூட்டப்பட்ட கதவின் முன்பு உள்ள நுழைவு வாயிலில் அமர்ந்துகொண்டு பெட்ரோலை தரையில் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டு இருந்துள்ளார்.
இது குறித்து அப்பகுதியில் இருந்த மக்கள் மயிலாப்பூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோயிலில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிக்க: அதிமுகவுடன் கூட்டணியா? அன்புமணி ராமதாஸ் பதில்!
மேலும், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முதியவா் வீட்டில் நகை, பணம் திருட்டு
வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற ஆம்ஸ்ட்ராங் வழக்கு எதிரி கைது

கூட்டு ஆராய்ச்சி: முதுநிலை, முனைவா் பட்ட மாணவா்களுக்கு ஜப்பான் பல்கலை. அழைப்பு

சிஎஸ்கே அகாதெமியில் ராகுல் சஹாா் சிறுவா்களுக்கு பயிற்சி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


