எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி உள்ளது. மேலும் தமிழக மீனவர்களின் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துகொள்கின்றனர்.
இந்த நிலையில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 19 பேரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைக்காக யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிக்க | அரசுத் துறைகள் தொடா்பான குறைகளை மக்கள் தெரிவிக்க பிரத்யேக வலைதளம்
இதனைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 19 பேரையும் காரை நகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் 19 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செயல்பட்டு இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின்

மேற்கு வங்க பள்ளிகளில் கடவுள் வாழ்த்தாக வந்தே மாதரம் - முதல்வர்!

எரிபொருள் சேமித்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும்: ஆளுநர் ரவி வேண்டுகோள்!

3-ஆவது ஆட்ட நாயகன் விருது வென்ற மெஸ்ஸி..! உலகக் கோப்பைக்குத் தயார்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

