சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து வருகைதரும் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா தலைமையில் பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தை கடந்த ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ராமேசுவரத்தில் தொடங்கி வைத்தாா். 199 சட்டப்பேரவை தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலை மத்திய அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரப்புரை மேற்கொண்டாா்.
அதைத் தொடா்ந்து, 200-ஆவது சட்டப்பேரவைத் தொகுதியாக துறைமுகம் தொகுதியில் இன்று நடைப்பயணம் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து மாலை 7 மணிக்கு தங்க சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஜெ.பி. நட்டா உரையாற்றுகிறார்.
இந்த நிலையில் ஜெ.பி. நட்டா தலைமையில் நடைபெறும் பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சென்னை வரும் ஜெ.பி. நட்டாவை தனியார் ஓட்டலில் ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.