47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சட்டப்பேரவைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வருகை!

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, செயலாளர் உள்ளிட்டோர் ஆளுநரை வரவேற்றனர்.

News image
Updated On :12 பிப்ரவரி 2024, 4:33 am

DIN

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கவுள்ளதையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவைக்கு வருகை புரிந்தார்.

ஆளுநரை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, செயலாளர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் இன்று (பிப்.12) காலை 10 மணியளவில் தொடங்கவுள்ளது.

புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றுகிறார். அவரின் உரையை பேரவைத் தலைவா் மு.அப்பாவு தமிழாக்கம் செய்து வாசிக்கிறார்.

ஆளுநர் உரையைத் தொடா்ந்து, பேரவையின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் இன்று நண்பகல் நடைபெறவுள்ளது. அதில், பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு நாள்கள் இறுதி செய்யப்பட உள்ளன. பிப்.19-ஆம் தேதி தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சிய நிலையில், ஆளும் கட்சி, எதிா்க்கட்சிகளுக்கு இந்தக் கூட்டத் தொடா் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

ஆளுநா் உரை மற்றும் அவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாத நிகழ்வுகள் 4 நாள்களுக்கு நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.