தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மேற்கு வங்கத்துக்கு தொல்லை கொடுக்கவே ஆர்.என். ரவி மாற்றம்: சீமான்

மேற்கு வங்க முதல்வருக்கு தொல்லை கொடுப்பதற்காகவே ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக சீமான் பேச்சு

News image
ஆர்.என். ரவி| சீமான்- சித்திரிப்பு
Updated On :6 மார்ச் 2026, 8:55 am

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கு வங்க முதல்வருக்கு தொல்லை கொடுப்பதற்காகவே ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசுகையில், "மேற்கு வங்க முதல்வருக்கு தொல்லை கொடுக்க வேண்டும். ஆளுநர் என்பவருக்கு ஒருமுறைதான் வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆனால், இவருக்கு தொடர்ந்து 3-ஆவது முறையாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இது அவர்களின் அரசு (பாஜக) என்பதால், அவர்கள் முடிவெடுக்கின்றனர். இங்கிருக்கும்போது நமக்கு எவ்வளவு நெருக்கடி கொடுத்தார் என்பது நமக்கும் தெரியும்.

புதுச்சேரியிலும் கிரண் பேடியை ஆளுநராக்கி, அப்போதைய முதல்வர் நாராயணசாமியை அவரது பணியை ஆற்றவிடவில்லை.

இப்போதும் மேற்கு வங்கத்தில் தேர்தல் நேரத்தில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கும் தெரியும்.

அவர்களுக்கு சிக்கலான மாநிலங்கள் என்றால் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம்.

அவர்கள் ஆட்சியில்லாத இடங்களில், அவர்களுடைய ஆளுநர்களை வைத்து, மக்கள் நலன்சார்ந்த எந்தவொரு நகர்வுக்கும் இடையூறு கொடுப்பர்.

மக்கள் நலன்சார்ந்த எந்தவொரு சட்டத்துக்கும் ஆளுநரின் கையெழுத்துதான் ஒப்புதல். ஆனால், ஆளுநர் என்பவர் ஒரு நியமன உறுப்பினர்தான்.

அப்படியிருக்கையில், ஒற்றை நியமன உறுப்பினருக்கு அவ்வளவு பெரிய அதிகாரத்தைக் கொடுப்பது சரியல்ல.

இதன்மூலம், அவர்கள் ஆட்சியில்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து, அந்த மாநில அரசுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பர்" என்று சீமான் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.