தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) வட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தென்தமிழக கடலோரப் பகுதி, மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.