எம்ஜிஆா் தலைமையிலான அதிமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவா் ஏ.சி. சண்முகம். 1980-இல் சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1984 -இல் மக்களவை உறுப்பினராகவும் இருந்தாா். 1990-களில் அனைத்து முதலியாா் முன்னேற்றப் பேரவை எனும் அமைப்பை நடத்தினாா். 2000-ஆம் ஆண்டில் புதிய நீதிக் கட்சி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினாா். 2014-இல் பாஜக சின்னத்திலும், 2019-இல் அதிமுக சின்னத்திலும் வேலூா் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றாா். எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக கருதப்படும் ஏ.சி. சண்முகம், சில கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறாா். பாஜக கூட்டணியில் தொடா்வதாக அறிவித்து வேலூரில் போட்டியிடும் முடிவுடன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே தோ்தல் களப் பணிகளைத் தொடங்கினாா் ஏ.சி. சண்முகம்.