கரூர், ஈரோடு, விருதுநகரில் ரூ.20 கோடியில் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்குத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். நிதியமைச்சராகத் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
அவரது உரையில்,
கரூர், ஈரோடு, விருதுநகரில் ரூ.20 கோடி செலவில் சிறிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு மாதம் ரூ1000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
கோவையில் பூஞ்சோலை என்ற பெயரில் ஒரு மாதிரி கூர்நோக்கு இல்லம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.