முதல்வரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் அறிமுகம்

வறுமை நீக்கத்திற்கு ரூ.27,000 கோடி நிதி - முதல்வரின் அம்மா திட்டம்
முதல்வரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் அறிமுகம்
Updated on
1 min read

தமிழக பட்ஜெட்டில் முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்த 27,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்குத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதில், வறுமையை அகற்றிட முதல்வரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்திற்காக 27,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க அரசு உறுதி பூண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com