தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது திருக்குறள் மட்டும் தானா ? சு. வெங்கடேசன்

தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது திருக்குறள் மட்டும் தானா என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவரது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:

அடுத்த ஆறு நாள்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார் பிரதமர் . ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன மதுரையைத் தவிர.

கோப்புப்படம்
3 ஐஐடி, எய்ம்ஸ்... ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்!

தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா? எனப் பதிவிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com