உச்சநீதிமன்றம் நியாயத்தை நிலைநாட்டியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

உச்சநீதிமன்றம் நியாயத்தை நிலைநாட்டியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் நியாயத்தை நிலைநாட்டியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

சண்டீகர் மேயர் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

"சண்டீகர் மேயர் தேர்தல் வழக்கில் மாண்பமை உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது நீதிக்கும் இம்மண்ணின் சட்டத்துக்குமான ஒளிவிளக்காக அமைந்துள்ளது.

அரசியல் சட்டப் பிரிவு 142-இன்கீழ் தனக்குள்ள அரிதினும் அரிதான அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ள உச்சநீதிமன்றம், நியாயத்தை நிலைநாட்டியுள்ளதுடன் தேர்தல் அதிகாரியின் தில்லுமுல்லு செயலையும் உறுதியாக நிராகரித்துள்ளது.

2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேர்மைக்கும் மக்களாட்சித் தத்துவங்களுக்குமான இந்த வெற்றி இந்திய ஜனநாயகத்தின் வலுவான செய்தியை எடுத்துரைப்பதோடு, பா.ஜ.க.வின் தகிடுதத்தங்களுக்குத் தக்க எச்சரிக்கையையும் விடுத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com