தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வேலூர் அருகே கார் விபத்து: ஓய்வுபெற்ற மருத்துவர் பலி

வேலூர் அருகே கார் விபத்தில் ஓய்வுபெற்ற மருத்துவர் பலியானார்.

News image
Updated On :24 பிப்ரவரி 2024, 12:12 pm

DIN

வேலூர்: வேலூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சம்ப இடத்திலேயே வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஓய்வுபெற்ற மருத்துவர் உயிரிழந்தார்.

வேலூர் (சிஎம்சி) மருத்துவமனையில் ருமட்டாலஜி பிரிவு முதன்மை மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் டெபாசிஸ் தண்டா. இவர் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் அருகே உள்ள அலமேலு மங்காபுரம் மேம்பாலத்தில் தனது சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மேம்பாலத்தில் அதிவேக பாதையில் ( Fast line) சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சம்பவ இடத்திலேயே ஓய்வுபெற்ற முதன்மை மருத்துவர் டெபாசிஸ் தண்டா உயிரிழந்தார். இதனால் மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஆம்புலன்ஸ் வரவழைத்து உடலை ஏற்றி அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர். வேலூர் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபலமான மருத்துவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் மருத்துவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.