கலைஞர் என்றாலே போராட்டம்தான் என முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை மெரினாவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 26) மாலை திறந்து வைத்தார்.
கலைஞர் நினைவிடத்தைச் சுற்றிலும் அவரின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன.
கருணாநிதியின் நினைவிட திறப்பையொட்டி என்றென்றும் கலைஞர் என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், கலைஞர் என்றாலே போராட்டம்தான். அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம் எனப் பதிவிட்டுள்ளார்.