தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

அதிமுகவில் இணையும் 2 பாஜக எம்எல்ஏக்கள்?

பாஜகவின் 2 எம்எல்ஏக்கள் இன்று பிற்பகலில் அதிமுகவில் இணையவுள்ளதாக கோவை வடக்கு எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)

Published On :

பாஜகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் இன்று பிற்பகலில் அதிமுகவில் இணையவுள்ளதாக கோவை வடக்கு எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கடந்த வாரம் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்கள் பலர் பாஜகவில் இணைந்த நிலையில், கோவையில் நேற்று அதிமுக மற்றும் பிற கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த நிகழ்வு திடீரென்று ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணையவுள்ளதாக அதிமுகவை சேர்ந்த கோவை வடக்கு எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “சேலத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு பாஜகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணையவுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

பல்லடத்தில் “என் மண், என் மக்கள்” நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கவுள்ள நிலையில், அம்மன் அர்ஜுனின் பேட்டி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.