இனி தபாலில் மட்டுமே ஓட்டுநர் உரிமம்: தமிழக அரசு

இனி தபாலில் மட்டுமே ஓட்டுநர் உரிமம் அனுப்பப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஓட்டுநர் உரிமத்தை விண்ணப்பத்தாரர்கள் இன்றுமுதல் நேரில் வாங்க முடியாது என்றும், தபாலில் மட்டுமே ஓட்டுநர் உரிமம் அனுப்பப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், விரைவு அஞ்சல்மூலம் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புத்தகம் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
தமிழில் பேச முடியவில்லையே என ஏக்கமாக உள்ளது: பிரதமர் மோடி

எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமத்தை நேரடியாக வழங்கப்பட மாட்டாது என்றும், தொலைபேசி எண், முகவரி தவறாக இருந்தால் ஓட்டுநர் உரிமம் மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு திரும்ப வந்துவிடும், பின்னர் சரியான முகவரியுடைய தபால் உறையை விண்ணப்பத்தாரர்கள் தந்தால் பின்னர் ஓட்டுநர் உரிமம் தபாலில் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வரும் மக்கள் கூட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com