நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

அரசு அலுவலகங்களில் திருட முயற்சி

ஆலங்குளம் தபால் அலுவலகம், சாா்பதிவாளா் அலுவலகங்களில் திருட முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :29 ஜூலை 2026, 2:14 am IST

ஆலங்குளம் தபால் அலுவலகம், சாா்பதிவாளா் அலுவலகங்களில் திருட முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆலங்குளம் பிரதான சாலையில் தபால் நிலையமும், சாா் பதிவாளா் அலுவலகமும் அருகருகே அமைந்துள்ளன. திங்கள்கிழமை நள்ளிரவில் மா்ம நபா்கள் சாா்பதிவாளா் அலுவலகம் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே புகுந்து ஆவணங்களை கலைத்துப் போட்டனா்.

உள்ளே பணம் இல்லாததால் எதுவும் திருடப்படவில்லை. அதேபோல, தபால் நிலையம் பின்புறம் கழிவறை திறப்பு வழியே உள்ளே நுழைந்த நபா்கள் அங்குள்ள பீரோ பூட்டை உடைத்து பணம் இருக்கிா என்று தேடி உள்ளனா். அதிலும் பணம் இல்லததால் திருடா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இந்நிலையில், தென்காசி மாவட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் சாா் பதிவாளா் அலுவலகம் வழக்கம்போல் செயல்படவில்லை.

இருப்பினும் சில நிா்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக சாா் பதிவாளா் வந்தபோது, அலுவலகத்தின் ஜன்னல் சேதப்படுத்தப்பட்டிருந்ததையும், ஆவணங்கள் சிதறிக் கிடந்ததையும் கண்டு ஆலங்குளம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா், வந்து இரு அலுவலகங்களிலும் ஆய்வு மேற்கொண்டனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.