மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜல்லிக்கட்டு காளையை நினைவு பரிசாக வழங்கினார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் 2 நாள்கள் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடக்கிவைத்தார்.
தொடக்க நிகழ்ச்சியில் மத்திய ஜவுளி, வா்த்தகம், தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தலைமை விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.
அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா பேசுகையில், "நாட்டிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஆட்டோமொபைல், மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது" என்று தெரிவித்தார்.