ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

சென்னையில் தொடர்ந்து மிதமான மழை: நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை(ஜன.8) மாலை வரை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2024, 10:31 pm IST

சென்னை: சென்னை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை(ஜன.8) மாலை வரை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில்,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

ஆவடி, அம்பத்தூா், பாடி,கோயம்பேடு, அசோக்நகா், கே.கே.நகா், அண்ணா நகா், தாம்பரம், குன்றத்தூா்,விமானநிலையம் , பல்லாவரம், மூலக்கடை, வில்லிவாக்கம், அயனாவரம், பெரம்பூா் பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள்கிழமை(ஜன.8) மாலை வரை மிக கனமழை பெய்யக்கூடும்.

விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். 

தற்போது வரை 2 மி.மீ முதல் 3 மி.மீ வரை மழை பெய்துள்ளது.

சராசரியாக 15 மி.மீ அளவிலும் மிக கனமழையின்போது 25 மி.மீ அளவிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்னும் 2 அல்லது 3 நாள்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.