சென்னை: சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் தியாகராய நகர், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சோதனை நிறைவடைந்த பிறகே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல் வெளியிடப்படும்.