தண்ணீரில் மூழ்கிய குழந்தை பலி

திண்டுக்கல்லில் வாளிக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

திண்டுக்கல்லில் வாளிக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

திண்டுக்கல் நாகல்புதூரைச் சோ்ந்தவா் ரங்கநாதன். திண்டுக்கல் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறாா். இவரது 2 வயது குழந்தை கிஷாந்த். இந்த நிலையில், வீட்டிலுள்ள குளியலறையில் இருந்த தண்ணீா் நிரப்பப்பட்ட வாளிக்குள் குழந்தை தவறி விழுந்தது. இதில் நீரில் மூழ்கிய குழந்தை உயிரிழந்தது.

இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com