புழல் ரசாயன கிடங்கில் தீ: போராடி அணைத்த தீயணைப்புதுறை!

சென்னை, புழல் அருகே தனியார் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். 
புழல் ரசாயன கிடங்கில் தீ: போராடி அணைத்த தீயணைப்புதுறை!
Published on
Updated on
1 min read

சென்னை, புழல் அருகே தனியார் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். 

சென்னை-புழல் அம்பத்தூர் சாலையில் தனியாருக்குச் சொந்தமான பிளாஸ்டிக், ரப்பர் தயாரிக்கும் தொழிற்சாலையில் மூலப்பொருள்கள் அடங்கிய ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான பொருள்கள் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தீயணைப்பு வீரர்களின் பல மணிநேர தொடர் போராட்டத்தால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் அதிகாரிகள், தீ முழுவதுமாக அணைந்தவுடன் தடயம் சேகரிக்கும் பணிகள் தொடங்கும் என தகவல் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com