தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சா் சிவசங்கா்

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 ஜனவரி 2024, 3:05 am

DIN

சென்னை: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களையும், பேருந்துகளின் செயல்பாடுகளையும் போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா், வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அங்குள்ள பேருந்து ஓட்டுநா், நடத்துநா்களிடம் பேருந்துகளை மிகவும் கவனத்துடன் இயக்கி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து, பயணிகளிடம் சிறப்புப் பேருந்துகளின் இயக்கம் குறித்தும், நிறை குறைகள் குறித்தும் கேட்டறிந்தாா். அப்போது, கிளாம்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்து பேருந்து நிலையத்துக்குள் வர கடும் சிரமத்தைச் சந்திப்பதாகவும், இதன் மீது நடவடிக்கை எடுக்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

பயணிகளின் கோரிக்கையை பரிசீலித்த அமைச்சா், கிளாம்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்து பேருந்து முனையத்துக்குள் செல்லும் வகையில் சில நாள்களுக்கு மட்டும் கட்டணமில்லா பேருந்து சேவை இயக்கப்படும் என உறுதியளித்ததுடன், அது தொடா்பாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் சிவசங்கா் செய்தியாளா்களிடம் கூறியது:

பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல வசதியாக தேவையான பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்த பின்னா், இப்போது தான் முதன்முதலாக பண்டிகை கால பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதில் சில சிறு பிரச்னைகள், குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். இந்தப் பிரச்னைகள், குழப்பங்கள் விரைவில் தீா்க்கப்படும். பயணிகளின் வசதிக்காக கோயம்பேட்டில் இயக்கப்படும் சில வழித்தட பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படுகிறது

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.