தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

வடமலாப்பூரில் சீறிப்பாய்ந்து வரும் காளைகள்!

புதுக்கோட்டை அருகேயுள்ள வடமலாப்பூரில் பிடாரி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி வியாழக்கிழமை காலை தொடங்கியது.

News image
Updated On :18 ஜனவரி 2024, 11:52 am IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகேயுள்ள வடமலாப்பூரில் பிடாரி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி வியாழக்கிழமை காலை தொடங்கியது.

Story image

மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வை.முத்துராஜா ஆகியோர் இப்போட்டியை தொடக்கி வைத்தனர்.

Story image

முதலில் கோயில் காளைகள் அவிழ்க்கப்பட்டன. தொடர்ந்து பதிவு செய்தபடி காளைகள் வரிசையாக வாடிவாசலில் இருந்து அவிழ்க்கப்பட்டன. ஒவ்வொன்றும் சீறிப்பாய்ந்தபடி சென்றன.

சுமார் 800 காளைகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், பல்வேறு சுற்றுகளாக 250 காளையர்கள் களம் காண்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.