வடமலாப்பூரில் சீறிப்பாய்ந்து வரும் காளைகள்!

புதுக்கோட்டை அருகேயுள்ள வடமலாப்பூரில் பிடாரி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி வியாழக்கிழமை காலை தொடங்கியது.
வடமலாப்பூரில் சீறிப்பாய்ந்து வரும் காளைகள்!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகேயுள்ள வடமலாப்பூரில் பிடாரி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி வியாழக்கிழமை காலை தொடங்கியது.

மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வை.முத்துராஜா ஆகியோர் இப்போட்டியை தொடக்கி வைத்தனர்.

முதலில் கோயில் காளைகள் அவிழ்க்கப்பட்டன. தொடர்ந்து பதிவு செய்தபடி காளைகள் வரிசையாக வாடிவாசலில் இருந்து அவிழ்க்கப்பட்டன. ஒவ்வொன்றும் சீறிப்பாய்ந்தபடி சென்றன.

சுமார் 800 காளைகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், பல்வேறு சுற்றுகளாக 250 காளையர்கள் களம் காண்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com