மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசாவில் குளிர் அலை அதிகரிக்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒடிசாவின் சில பகுதிகளில் குளிர் அலைகள் கடுமையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :26 ஜனவரி 2024, 4:16 pm

DIN

புவனேஸ்வர்: அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒடிசாவின் சில பகுதிகளில் குளிர் அலைகள் கடுமையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடமேற்கு திசையிலிருந்து குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று வீசுவதால், வடக்கு ஒடிசாவில் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு குளிர் அலை நிலவும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையத்தின் மூத்த வானிலை விஞ்ஞானி உமா ஷகர் தாஷ் தெரிவித்தார்.

இந்நிலையில் சுந்தர்கர், ஜார்சுகுடா, தியோகர், கியோஞ்சர் மற்றும் அங்குல் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜார்சுகுடா, சுந்தர்கர், கியோஞ்சர், தியோகர் மற்றும் அங்குல் ஆகிய இடங்களில் நாளை காலை 8.30 மணி வரை குளிர் அலை நிலவக்கூடும் என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ள வேளையில், மாவட்டங்களில் பல இடங்களில் அடர்த்தியானது முதல் மிதமானது வரை மூடுபனி ஏற்படக்கூடும் என்று கணித்துள்ளது.

அடுத்த வரும் மூன்று நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், அதன் பிறகு படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் சுந்தர்கரில் உள்ள கீரியில் வெப்பநிலை அளவானது 6 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. அதே வேளையில் ரூர்கேலா, ஜார்சுகுடா, சுந்தர்கர், அங்குல் மற்றும் கோராபுட் ஆகிய ஒன்பது இடங்களில் இரவு வெப்பநிலையானது 12 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.