ஆளுநர் ஆர்.என். ரவியின் சித்தன்னவாசல் பயணம் ரத்து!

ஆளுநர் ஆர்.என். ரவியின் சித்தன்னவாசல் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆா்.என்.ரவி
ஆளுநர் ஆா்.என்.ரவி
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை: ஆளுநர் ஆர்.என். ரவியின் சித்தன்னவாசல் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு திங்கள்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த ஆளுநர் ஆர்.என். ரவியின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காரைக்குடியில் இருந்து புறப்படும் நேரத்தில் தாமதம் ஏற்பட்டதாகவும், மாலையில் திருச்சி விமான நிலையம் செல்வதற்கு தாமதமாகிவிடக் கூடாது என்பதற்காக பயணம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நிர்வாகக் காரணங்களுக்காக ஆளுநர் ஆர்.என். ரவியின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் ஆளுநரின் வருகையை எதிர்த்து கறுப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com