காஞ்சிபுரத்தில் நாளை 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச் செல்வி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில்,
பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் உடையது காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் திருக்கோயிலில் பிப். 1-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்ட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.