இந்தியா கூட்டணியில் என் பேச்சை நிராகரித்தன் காரணமாகவே மீண்டும் பழைய இடத்துக்கே வந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த பிகாா் முதல்வா் நிதிஷ் குமாா், அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளார்.
கூட்டணியிலிருந்து விலகியதற்கு காரணம் என்ன? என பலரும் விவாதித்து வந்த நிலையில், பிகார் முதல்வர் நிதிஷ் குமார் முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தொகுதிப் பங்கீடு சிக்கல்தான் இந்தியா கூட்டணியிலிருந்து விலகியதற்கு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வேறு பெயரை தேர்வு செய்ய வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் அந்த பெயரைத் தான் முடிவு செய்தனர். இந்தியா கூட்டணியில் என் பேச்சை நிராகரித்தனர்.
எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை அவர்கள் இதுவரை முடிவு செய்யவில்லை. இதுபோன்ற சில முரண்பாடுகள் ஏற்பட்டதால் நான் கூட்டணியிலிருந்து வெளியேறினேன்.
பிகார் மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்கவியுடன் நடிக்க வேண்டாம்..! ரசிகையின் கடிதத்திற்குச் சுவாரஸ்யமாக பதிலளித்த விஜய்!
அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி

வாக்களிக்கும் உரிமையையும் ஒரு அடிப்படை உரிமையாக அறிவித்தால் என்ன? - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி







