வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

25 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

எல்லைத் தாண்டியதாக 25 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

News image
கோப்புப் படம்.
Updated On :1 ஜூலை 2024, 3:03 am

DIN

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 25 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த மீனவர்களை 4 நாட்டுப் படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கைது செய்யப்பட்ட 25 மீனவர்களையும் இலங்கை காங்கேசன்துறை முகாமில் வைத்து கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்வது தொடர் கதையாக உள்ளது.

2024 ஜனவரி முதல் தற்போது வரை மொத்தம் 28க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடி படகுகளையும், 214க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.