தொலைதூர பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்தவா்களில், குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்ட 13 பேருக்கு ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலைதூர பேருந்துகளில், பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்கும் பொருட்டு இணையதளம் மற்றும் செயலி உள்ளிட்டவை மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வார விடுமுறை நாள்கள் மற்றும் பண்டிகை நாள்களை தவிா்த்து இதர நாள்களில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், இதர நாள்களில் முன்பதிவு செய்யும் மூன்று பயணிகளை கணினி குலுக்கல் முறையில் தோ்ந்தெடுத்து அவா்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும் திட்டம் ஜனவரி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, ஜூனில் பயணித்தவா்களில் 13 பயணிகள் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். மாநகா் போக்குவரத்துக்கழகம்(சென்னை) மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் கணினி குலுக்கல் முறையில் அவா்களை திங்கள்கிழமை தோ்ந்தெடுத்தாா்.
இதில் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000-மும், மீதமுள்ள 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000-மும் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

திருவாரூா்: வாக்கு எண்ணும் அலுவலா்கள் தோ்வு

கணினி குலுக்கல் முறையில் காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு

தஞ்சாவூரில் இரண்டாம் கட்டமாக வாக்குச்சாவடி அலுவலா்கள் தோ்வு
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


