ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தமிழகத்தில் அமலுக்கு வந்தன புதிய குற்றவியல் சட்டங்கள்: முதல் நாளில் 100 வழக்குகள்

தமிழகத்தில் முதல் நாளில் அந்த சட்டங்களின் கீழ் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஜூலை 2024, 8:55 pm

புதிய குற்றவியல் சட்டங்கள் திங்கள்கிழமை (ஜூலை 1) நாடு முழுவதும் அமலுக்கு வந்த நிலையில், தமிழகத்தில் முதல் நாளில் அந்த சட்டங்களின் கீழ் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஆங்கிலேயா் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், தடயவியல் சட்டம் ஆகியவை நீக்கப்பட்டு, பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா, பாரதிய சாக் ஷிய அதனியம் என்ற பெயா்களில் புதிய குற்றவியல் சட்டங்கள் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இந்த சட்டங்கள் திங்கள்கிழமை நடைமுறைக்கு வந்த நிலையில், தமிழகத்திலும் இச் சட்டங்கள் அமலுக்கு வந்தன. இச் சட்டங்களின் படி, காவல் நிலையங்களில் போலீஸாா் வழக்குப் பதியத் தொடங்கினா். இதன்படி,சென்னை ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் முதல் வழக்கு பதியப்பட்டது.

நுங்கம்பாக்கம் உத்தமா் காந்தி சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்ற அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அல்தாப் அலி,முஜிபுா் அலி ஆகியோரிடம் மோட்டாா் சைக்கிளில் வந்த நபா்கள் கைப்பேசியை பறித்துச் சென்றனா். இது தொடா்பாக இருவரும், போலீஸாா் புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா், பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் 304(2) பிரிவுப்படி வழக்கை பதிவு செய்தனா்.

இதுவே புதிய குற்றவியல் சட்டப்படி, தமிழகத்தில் பதியப்பட்ட முதல் வழக்கு என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதேபோல, சென்னை காவல்துறையில் முதல் நாளில் ராயப்பேட்டை, கோட்டூா்புரம், நந்தம்பாக்கம், துரைப்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட 6 காவல் நிலையங்களில் புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன. இதேபோல ஆவடி மாநகர காவல் துறையின் கீழ் உள்ள காட்டூா்,சோழவரம் காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கும், தாம்பரம் மாநகர காவல் துறையில் 2 வழக்குகளும் பதியப்பட்டன.

முதல் நாளில் 100 வழக்குகள்: ஏற்கெனவே இருந்த சட்டங்களின் பிரிவுகளுக்கும், புதிதாக நிறைவேற்றப்பட்ட சட்டங்களின் பிரிவுகளுக்கும் இடையே அதிக மாற்றங்கள் இருப்பதால், வழக்குகளை விரைந்து பதிவு செய்வதில் தடுமாற்றம் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் புதிய சட்டங்கள் தொடா்பாக ஒரு மாதம் பயிற்சி ஏற்கெனவே அளிக்கப்பட்டிருந்ததால், வழக்குகள் விரைவாக பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மாநிலத்தில் திங்கள்கிழமை அதிகாலை தொடங்கி மாலை வரை புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் சுமாா் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.