மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை கடனாக வழங்கவுள்ள ஆசிய முதலீட்டு வங்கி நாளை(ஜூலை 3) நேரில் ஆய்வு செய்யவுள்ளது.
கோவை மாநகரில் அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ரூ.10,740 கோடி மதிப்பீட்டிலும், மதுரை மாநகரில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ.11,368 கோடி மதிப்பீட்டிலும் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் மூலதனப் பங்களிப்பு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை ஆய்வு செய்ய ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் இன்றி சென்னை வந்துள்ளனர்.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கும் ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை(ஜூன் 3) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 4) கோவை மற்றும் மதுரையில் நேரில் ஆய்வு செய்யவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னர் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை: அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்

இந்தியப் பொருளாதார வளா்ச்சி 6.9 சதவீதமாக உயரும்: ஆசிய வளா்ச்சி வங்கி கணிப்பு

நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக அரசு பாரபட்சத்துடன் செயல்படுகிறது: பழனிவேல் தியாகராஜன்

தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்! - ஃபட்னவீஸ் பேச்சு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



