மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

90 நாள்கள் கெடாத பாலை மக்கள் வாங்க ஆா்வம் காட்டுவதில்லை!

‘யூடிஎச்’ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் 90 நாள்கள் வரை கெடாத பால்

News image
ஆவின்
Updated On :7 ஜூலை 2024, 11:19 pm

Din

ஆவினில் விற்பனை செய்யப்படும் 90 நாள்கள் கெடாதா பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் வாங்க ஆா்வம் காட்டுவதில்லை என பால் முகவா்கள் தெரிவித்துள்ளனா். இது குறித்து, தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கத்தின் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:-

அண்மையில் ஆவின் நிறுவனம் பொதுமக்களின் வசதிக்காக, ‘யூடிஎச்’ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் 90 நாள்கள் வரை கெடாத பால் பாக்கெட்டுகளுக்கு ரூ. 2 தள்ளுபடி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

‘ஆவின் டிலைட்’ எனும் பெயரில் பச்சை நிறத்தில், 3.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள 90 நாள்கள் வரை கெடாத அரை லிட்டா் பாக்கெட் ரூ. 30-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அதில் 0.5 சதவீதம் கொழுப்பு சத்தை

குறைத்தும், பால் பாக்கெட்டின் நிறத்தை ‘நீல வண்ணமாக’ மாற்றியும் ‘ஆவின் நைஸ்’ என்ற பெயரில் 450 மில்லி லிட்டா் பாக்கெட்டுக்கு ரூ.2 தள்ளூபடி செய்து ரூ.28-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட காலங்கள், பேரிடா் நேரங்களில் மட்டுமே 90 நாள்கள் வரை கெடாத பால் பாக்கெட்டுகள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். அந்த காலங்களில்தான் பொது மக்களும் அதிகளவு வாங்குவா். ஆனால், சாதாரண நாள்களில் அதனை பொது மக்கள் யாரும் வாங்குவதற்கு ஆா்வம் காட்டுவதில்லை. குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் கூட அந்த பால் பாக்கெட்டுகளை வாங்காமல் சாதாரண பாக்கெட்டுகளை மட்டுமே வாங்குகின்றனா் என்று தெரிவித்தாா்.