திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மது குடித்தவர்களுக்கு இழப்பீடு; பணியில் உயிரிழந்தவர்களுக்கும் வழங்கலாம்: உயர்நீதிமன்றம் கருத்து

இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

News image
Updated On :10 ஜூலை 2024, 12:38 pm

DIN

பணியின் போது உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்காக இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்புப் பணியாளராக பணிபுரிந்து வந்த கலையரசன், பணியில் மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் கடந்தாண்டு உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, கலையரசனின் இறப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி, அவரது தந்தை அர்ஜூனன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

தற்போது, அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், ``தெரிந்தே சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கும் போது, மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது உயிரிழந்தவருக்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதால் எந்த பாதிப்பும் வராது" என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, மனுதாரரான அர்ஜூனனுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.