பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குநரின் ஜாமீன் மனு தள்ளுபடி

ரூசோவின் ஜாமீன் மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் நிராகரிப்பு

News image
சென்னை உயர்நீதிமன்றம்(கோப்புப் படம்.)
Updated On :10 ஜூலை 2024, 7:37 pm

Din

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குநா்களில் ஒருவரான ரூசோவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூா், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பண மோசடியில் ஈடுபடுவதாக புகாா் எழுந்ததைத் தொடா்ந்து, தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் 21 போ் மீது வழக்கு பதிவு செய்தனா்.

விசாரணையில் அந்த நிறுவனம், 1,09,255 பேரிடம் ரூ. 2,438 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த ரூசோ கைது செய்யப்பட்டாா். ரூசோ தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன் விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் மனுவை திரும்பப் பெறுவதாக ரூசோ தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.