தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கள்ளக்குறிச்சி சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்குகள் ஜூலை 18-க்கு ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்குகள் ஜூலை 18-க்கு ஒத்திவைப்பு

News image
உயர்நீதிமன்றம்
Updated On :11 ஜூலை 2024, 11:00 pm

Din

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையை ஜூலை 18- ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரி அதிமுகவை சோ்ந்த வழக்குரைஞா் ஐ.எஸ்.இன்பதுரை, பாமக செய்தித் தொடா்பாளா் கே.பாலு, பாஜகவை சோ்ந்த ஏற்காடு ஏ.மோகன்தாஸ், வால்பாறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீதரன் ஆகியோா் தனித்தனியாக பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனா். இதில், அதிமுக, பாமக, சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.

அதில், ‘சிபிசிஐடி போலீஸாா் முறையாக விசாரணை நடத்தி வருவதால், இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தேவையில்லை. கள்ளச்சாராயத்தை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி (பொ) அரங்க.மகாதேவன், நீதிபதி முகமது சபிக் ஆகியோா் கொண்ட முதல் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா்கள் தரப்பில், வழக்குரைஞா்கள் டி.செல்வம், யானை ராஜேந்திரன், ஜி.எஸ்.மணி ஆகியோா் ஆஜராகினா். அரசுத் தரப்பில், தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘2 வழக்குகளுக்கு ஏற்கெனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. புதிய வழக்குகளுக்கான பதில் மனுவை அடுத்த வாரம் தாக்கல் செய்கிறோம்’ என்றாா்.

இதையடுத்து இந்த வழக்கை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.